CORRECT LYRICS

Lyrics : Neer Seyya Ninaithathu

நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே
நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே

உம் வேளைக்காக காத்திருக்க
பொறுமையை எனக்கு தந்தருளும்
உம் வேளைக்காக காத்திருக்க
கிருபையே எனக்கு தந்தருளும்

நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே
நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே

காலங்கள் மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன்
இருப்பதால் கலக்கம் இல்லை

காலங்கள் மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன்
இருப்பதால் கலக்கம் இல்லை

என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
எனக்காக நிறைவேற்றுவீர்
என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
மாறாமல் நிறைவேற்றுவீர்